Tuesday, August 17, 2010

Friday, January 1, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கூடிக் கலையும் மாநாடாக இருக்காது: முதல்வர்



கருத்துக்கள்

இந்தியப் பேரரசின் மொழியாகத் தமிழ் அமைய எடுக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டுகள். அதே நேரம் தமிழ் மொழி தமிழ் நாட்டில் உண்மையான ஆட்சி மொழியாகக்,கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, தனியார் அலுலகங்களிலும் மத்திய அரசின் அலுவலகங்களிலும் பிற மாநில அரசு அலுவலகங்களிலும் தமிழ் நாட்டில் தமிழே அலுவல் மொழியாக, நீதி மன்ற மொழியாக, வணிக மொழியாக அமைய நடவடிக்கை எடுகக வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/1/2010 3:56:00 AM

www.uploadhouse.com/viewfile.php?id=5007380 www.uploadhouse.com/viewfile.php?id=5007379 www.uploadhouse.com/viewfile.php?id=5007381 தயவு செய்து இந்த படங்களை மற்றவர்களுக்கும் புத்தாண்டு செய்தியாக அனுப்புங்கள்

By bavani
1/1/2010 12:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க வேண்டாம்: ஜெயலலிதா அறிக்கை

கருத்துக்கள்

சாத்தான் வேதம் ஓதுதல்

என்பதற்கு எடுத்துக் காட்டாக

இந்த அறிக்கையை எடுத்துக் கொள்ளலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஆட்சியைக் கவிழ்க்க எண்ண வேண்டாம்: முதல்வர்



இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி. உடன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், வருவாய் மற்று

படிப்பதற்கு நன்றாக உள்ளது. குறையைக் கேட்டால் களைவார் என்னும் நம்பிக்கையுடனே கேட்கின்றேன். முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு துறையில் மிகப் பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. அவற்றை வெளிப்படையாகத் தெரிவிக்கவும் தெரிவித்தபின் உரியவர்களைத் தண்டிக்கவும் செய்வாரா மாண்புமிகு முதல்வர் அவர்கள்? இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் எனும் திருவள்ளுவர் வாக்கை நினைந்து கூறுபவரைப் பழி வாங்காமல் கூறப்படும் குறையை உடனே சரி செய்ய முன் வருவாரா? நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் (இதனைப் படிக்கும் அதிகாரிகள் மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்ல வேண்டுகிறேன். நன்றி.)

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:16:00 AM

இலங்கைத் தமிழர்

Saturday, January 2, 2010

இலங்கைத் தமிழர் பிரச்னை திட்டமிட்டு திசைதிருப்பப்படுகிறது: வைகோ குற்றஞ்சாட்டு




கருத்துக்கள்

உடனே ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அல்லது ஈழத்தமிழர் விடுதலை உதவி இயக்கம் என ஒன்றை அமைத்து முதற்கட்டமாக இந்தியாவின் பிற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு பிற இனத்தவர், பிற கட்சியினர், பிற மாநிலத்தவர் ஒத்துழைப்புகளையும் பெற்று இந்திய நாட்டைத் தமிழ் ஈழ நட்புறவு நாடாக மாற்றி தமிழ் ஈழ நாட்டைத் தனி அரசாக ஏற்க - அங்கீகரிக்க- நடவடிக்கை எடுங்கள்! உங்களின் சலியா முயற்சி வெல்லட்டும்! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையில் அமையும் தமிழ் ஈழக் குடியரசின் குரல் பன்னாட்டு அவையிலும் அனைத்து நாடுகளிலும் ஒலிக்கட்டும்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க தமிழ் ஈழ - இந்திய நட்புறவு! வாழ்த்துகளுடன் - புத்தாண்டு வாழ்த்துகளுடன் - முன்னதான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:54:00 AM

அன்றும் இன்றும் என்றும் தொடர்கதையாக இந்த அவலம் தொடரத்தான செய்கின்றது. ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனப் பெயர் சூட்டக் கூடி விட்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனப் பெயர் சூட்டியபொழுதே அந்த அமைப்பு சறுக்கத் தொடங்கி விட்டதல்லவா? இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பிற்காகச் செயல்படட்டும்!

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:53:00 AM
நாற்காலிகளுக்காகப் பாடும் அவல நிலை: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்


கருத்துக்கள்

தலைப்பைப் படித்ததும் அரசியல் வாதிகளின் பதவி நாற்காலி வெறியைக் குறிப்பிடுகிறாரோ என நினைத்தேன். அதற்கும் தலைப்பு பொருந்துகிறது. உயர்நிலை ஒப்பிசை அரங்குகள் தவிர அனைத்து இடங்களிலும் தமிழிசையே ஆட்சி செய்தால் இந்த அவல நிலை மாறும். பிற மொழிகளில் பாடி, பிற மொழிப் பாடல்களுக்கு ஆடி , பிற மொழிகளில் பட்டங்கள் வழங்கிக் கொண்டு தமிழிசையை தமிழ்க்கலையை / தமிழினத்ததைச் சிதைக்கும் இசை அரங்குகளுக்குச் செல்லாதவர்கள் பாராட்டிற்குரியவர்களே! தமிழில் பாடி, தமிழ்ப் பாட்டிற்கு ஆடி, தமிழ் உணர்வுப் படைப்புகளை மையமாகக் கொண்டு கலைகள் வளரட்டும்! வாழ்க தமிழுடன்! வளர்க கலையுடன்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 6:13:00 AM


இலங்கைத் தமிழர் பிரச்னை தமிழகக் கட்சி அரசியலா?



தடம் புரண்ட தா.பா. இப்போது சரியான பாதையில் செல்கிறார். எனவே,மிகச் சரியாக வினாக்களைத் தொடுத்து இக் கட்டுரையைப் படைத்துள்ளார். தடம்புரண்டுள்ள பிறரும் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும். இனப் போராகவோ உள்நாட்டுப் போராகவோ கருதாமல் தமிழினத்தின் மீது இந்தியா உள்பட பல நாடுகள் நடத்திய வஞ்சகப் படுகொலையாகக் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-இந்தியநட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 7:00:00 AM