Thursday, April 28, 2011

புலிகளின் தளபதி இரமேசு சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை?

புலிகளின் தளபதி இரமேசு சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை?

இது போன்ற  கொடூரக் கொலைகளுக்குப் பொறுப்பு சிங்கள அரசு மட்டுமன்று; இந்திய அரசும் தமிழக ஆட்சியாளர்களும் அனைத்துக் கட்சிகளும்தான். தங்கள் பெருமையைக் காட்ட பல நேர மணிநேர ஊர்வலத்தையும் கூட்டத்தையும் கூட்டும்  இவர்களால் இனப்படுகொலைநடக்கும் முன்னரே தமிழக மக்களை ஒருங்கிணைத்துப் போராடி இவற்றைத் தடுத்திருக்க முடியுமே! இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்ட மன்ற உறுப்பினர்க்ளும் அவர்களது ௩ தலைமுறை குடும்பத்தினரும் தேர்தலில் போட்டியிடவும் அரசின் பதவிகளை  வகிக்கவும் தடை விதிக்க வேண்டும். உடந்தையாயிருந்த அதிகாரிகளின் சொ்த்துகளைப் பறிமுதல் செய்து தண்டிப்பதுடன் அவர்களது  3 தலைமுறையினர் ஆட்சிப் பொறுப்பில்  வருவதற்கும் தடை விதிக்க வேண்டும். சிங்களத் தலைவர்களையும் படைத்தலைவர்களையும் கூட்டுக் கொலையாளிகளாக இருந்த இந்தியத்தலைவர்களையும்
அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும்.  கடவுளே நடைப்பிணங்களாக உள்ள எங்களையும் மன்னியுங்கள.! 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

Messenger to Mercury: dnamani

Messenger to Mercury: dnamani article: எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'

தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் நன்றாக எழுதியுள்ளார். பாராட்டுகள். தூது கலம் பற்றியும் புதன் பற்றியும்  மேலும் அறிய
http://messenger.jhuapl.edu/  என்னும் வலைத்தளத்தினைக் காண்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

dinamani editorial about 49.O. :

dinamani editorial about 49.O. : தலையங்கம்: "ஓ' போட முடியவில்லை!

உள்ளன உள்ளபடி எழுதப்பட்டுள்ள அருமையான தலையங்கம். தேர்தல் ஆணையம் கவனிக்குமா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

Tuesday, August 17, 2010

Friday, January 1, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கூடிக் கலையும் மாநாடாக இருக்காது: முதல்வர்



கருத்துக்கள்

இந்தியப் பேரரசின் மொழியாகத் தமிழ் அமைய எடுக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டுகள். அதே நேரம் தமிழ் மொழி தமிழ் நாட்டில் உண்மையான ஆட்சி மொழியாகக்,கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, தனியார் அலுலகங்களிலும் மத்திய அரசின் அலுவலகங்களிலும் பிற மாநில அரசு அலுவலகங்களிலும் தமிழ் நாட்டில் தமிழே அலுவல் மொழியாக, நீதி மன்ற மொழியாக, வணிக மொழியாக அமைய நடவடிக்கை எடுகக வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/1/2010 3:56:00 AM

www.uploadhouse.com/viewfile.php?id=5007380 www.uploadhouse.com/viewfile.php?id=5007379 www.uploadhouse.com/viewfile.php?id=5007381 தயவு செய்து இந்த படங்களை மற்றவர்களுக்கும் புத்தாண்டு செய்தியாக அனுப்புங்கள்

By bavani
1/1/2010 12:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க வேண்டாம்: ஜெயலலிதா அறிக்கை

கருத்துக்கள்

சாத்தான் வேதம் ஓதுதல்

என்பதற்கு எடுத்துக் காட்டாக

இந்த அறிக்கையை எடுத்துக் கொள்ளலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஆட்சியைக் கவிழ்க்க எண்ண வேண்டாம்: முதல்வர்



இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி. உடன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், வருவாய் மற்று

படிப்பதற்கு நன்றாக உள்ளது. குறையைக் கேட்டால் களைவார் என்னும் நம்பிக்கையுடனே கேட்கின்றேன். முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு துறையில் மிகப் பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. அவற்றை வெளிப்படையாகத் தெரிவிக்கவும் தெரிவித்தபின் உரியவர்களைத் தண்டிக்கவும் செய்வாரா மாண்புமிகு முதல்வர் அவர்கள்? இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் எனும் திருவள்ளுவர் வாக்கை நினைந்து கூறுபவரைப் பழி வாங்காமல் கூறப்படும் குறையை உடனே சரி செய்ய முன் வருவாரா? நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் (இதனைப் படிக்கும் அதிகாரிகள் மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்ல வேண்டுகிறேன். நன்றி.)

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:16:00 AM

இலங்கைத் தமிழர்

Saturday, January 2, 2010

இலங்கைத் தமிழர் பிரச்னை திட்டமிட்டு திசைதிருப்பப்படுகிறது: வைகோ குற்றஞ்சாட்டு




கருத்துக்கள்

உடனே ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அல்லது ஈழத்தமிழர் விடுதலை உதவி இயக்கம் என ஒன்றை அமைத்து முதற்கட்டமாக இந்தியாவின் பிற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு பிற இனத்தவர், பிற கட்சியினர், பிற மாநிலத்தவர் ஒத்துழைப்புகளையும் பெற்று இந்திய நாட்டைத் தமிழ் ஈழ நட்புறவு நாடாக மாற்றி தமிழ் ஈழ நாட்டைத் தனி அரசாக ஏற்க - அங்கீகரிக்க- நடவடிக்கை எடுங்கள்! உங்களின் சலியா முயற்சி வெல்லட்டும்! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையில் அமையும் தமிழ் ஈழக் குடியரசின் குரல் பன்னாட்டு அவையிலும் அனைத்து நாடுகளிலும் ஒலிக்கட்டும்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க தமிழ் ஈழ - இந்திய நட்புறவு! வாழ்த்துகளுடன் - புத்தாண்டு வாழ்த்துகளுடன் - முன்னதான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:54:00 AM

அன்றும் இன்றும் என்றும் தொடர்கதையாக இந்த அவலம் தொடரத்தான செய்கின்றது. ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனப் பெயர் சூட்டக் கூடி விட்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனப் பெயர் சூட்டியபொழுதே அந்த அமைப்பு சறுக்கத் தொடங்கி விட்டதல்லவா? இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பிற்காகச் செயல்படட்டும்!

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:53:00 AM