புலிகளின் தளபதி இரமேசு சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை?
அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். கடவுளே நடைப்பிணங்களாக உள்ள எங்களையும் மன்னியுங்கள.!
இந்தியப் பேரரசின் மொழியாகத் தமிழ் அமைய எடுக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டுகள். அதே நேரம் தமிழ் மொழி தமிழ் நாட்டில் உண்மையான ஆட்சி மொழியாகக்,கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, தனியார் அலுலகங்களிலும் மத்திய அரசின் அலுவலகங்களிலும் பிற மாநில அரசு அலுவலகங்களிலும் தமிழ் நாட்டில் தமிழே அலுவல் மொழியாக, நீதி மன்ற மொழியாக, வணிக மொழியாக அமைய நடவடிக்கை எடுகக வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
www.uploadhouse.com/viewfile.php?id=5007380 www.uploadhouse.com/viewfile.php?id=5007379 www.uploadhouse.com/viewfile.php?id=5007381 தயவு செய்து இந்த படங்களை மற்றவர்களுக்கும் புத்தாண்டு செய்தியாக அனுப்புங்கள்
படிப்பதற்கு நன்றாக உள்ளது. குறையைக் கேட்டால் களைவார் என்னும் நம்பிக்கையுடனே கேட்கின்றேன். முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு துறையில் மிகப் பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. அவற்றை வெளிப்படையாகத் தெரிவிக்கவும் தெரிவித்தபின் உரியவர்களைத் தண்டிக்கவும் செய்வாரா மாண்புமிகு முதல்வர் அவர்கள்? இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் எனும் திருவள்ளுவர் வாக்கை நினைந்து கூறுபவரைப் பழி வாங்காமல் கூறப்படும் குறையை உடனே சரி செய்ய முன் வருவாரா? நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் (இதனைப் படிக்கும் அதிகாரிகள் மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்ல வேண்டுகிறேன். நன்றி.)
உடனே ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அல்லது ஈழத்தமிழர் விடுதலை உதவி இயக்கம் என ஒன்றை அமைத்து முதற்கட்டமாக இந்தியாவின் பிற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு பிற இனத்தவர், பிற கட்சியினர், பிற மாநிலத்தவர் ஒத்துழைப்புகளையும் பெற்று இந்திய நாட்டைத் தமிழ் ஈழ நட்புறவு நாடாக மாற்றி தமிழ் ஈழ நாட்டைத் தனி அரசாக ஏற்க - அங்கீகரிக்க- நடவடிக்கை எடுங்கள்! உங்களின் சலியா முயற்சி வெல்லட்டும்! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையில் அமையும் தமிழ் ஈழக் குடியரசின் குரல் பன்னாட்டு அவையிலும் அனைத்து நாடுகளிலும் ஒலிக்கட்டும்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க தமிழ் ஈழ - இந்திய நட்புறவு! வாழ்த்துகளுடன் - புத்தாண்டு வாழ்த்துகளுடன் - முன்னதான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்றும் இன்றும் என்றும் தொடர்கதையாக இந்த அவலம் தொடரத்தான செய்கின்றது. ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனப் பெயர் சூட்டக் கூடி விட்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனப் பெயர் சூட்டியபொழுதே அந்த அமைப்பு சறுக்கத் தொடங்கி விட்டதல்லவா? இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பிற்காகச் செயல்படட்டும்!