Tuesday, August 17, 2010

ஆட்சியைக் கவிழ்க்க எண்ண வேண்டாம்: முதல்வர்



இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி. உடன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், வருவாய் மற்று

படிப்பதற்கு நன்றாக உள்ளது. குறையைக் கேட்டால் களைவார் என்னும் நம்பிக்கையுடனே கேட்கின்றேன். முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு துறையில் மிகப் பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. அவற்றை வெளிப்படையாகத் தெரிவிக்கவும் தெரிவித்தபின் உரியவர்களைத் தண்டிக்கவும் செய்வாரா மாண்புமிகு முதல்வர் அவர்கள்? இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் எனும் திருவள்ளுவர் வாக்கை நினைந்து கூறுபவரைப் பழி வாங்காமல் கூறப்படும் குறையை உடனே சரி செய்ய முன் வருவாரா? நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் (இதனைப் படிக்கும் அதிகாரிகள் மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்ல வேண்டுகிறேன். நன்றி.)

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:16:00 AM

No comments: