Tuesday, August 17, 2010

நாற்காலிகளுக்காகப் பாடும் அவல நிலை: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்


கருத்துக்கள்

தலைப்பைப் படித்ததும் அரசியல் வாதிகளின் பதவி நாற்காலி வெறியைக் குறிப்பிடுகிறாரோ என நினைத்தேன். அதற்கும் தலைப்பு பொருந்துகிறது. உயர்நிலை ஒப்பிசை அரங்குகள் தவிர அனைத்து இடங்களிலும் தமிழிசையே ஆட்சி செய்தால் இந்த அவல நிலை மாறும். பிற மொழிகளில் பாடி, பிற மொழிப் பாடல்களுக்கு ஆடி , பிற மொழிகளில் பட்டங்கள் வழங்கிக் கொண்டு தமிழிசையை தமிழ்க்கலையை / தமிழினத்ததைச் சிதைக்கும் இசை அரங்குகளுக்குச் செல்லாதவர்கள் பாராட்டிற்குரியவர்களே! தமிழில் பாடி, தமிழ்ப் பாட்டிற்கு ஆடி, தமிழ் உணர்வுப் படைப்புகளை மையமாகக் கொண்டு கலைகள் வளரட்டும்! வாழ்க தமிழுடன்! வளர்க கலையுடன்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 6:13:00 AM

No comments: