கலைஞர் அவர்களின் சலியா எழுத்துப் பணி தொடரட்டும். ஆனால்,ஆட்சிக் கட்டிலில் அமர இயலா அளவிற்குக் குடுமபததினர் முள் படுக்கையை விரிக்கின்றார்களோ எனக் கவலைப்பட வேண்டியுள்ளது. ஈழத் தமிழர்களுக்குக் கழுவாய் தேடி அவர்கள் விடுதலை பெற உழைப்பதற்கும் தமிழ்ஈழ அரசைக் காண்பதற்கும் நெடுநாள் வாழ வேண்டும். மேலும், வரலாற்று மறைப்புகளுக்குக் காரணம் பிற்பட்ட மன்பதையில் பிறந்ததன்று. எல்லா அரசாங்கமும் கட்சி அரசுகளாக மாறி எல்லாப் படைப்பாளர்களும் கட்சிசார் படைப்பாளர்களாக மாறியதுதான். எனவே, அண்ணா பற்றிய படைப்பாக இருந்தால் திமுக ஆட்சியில் அதிமுக, மதிமுக தலைவர்களைப் பற்றிய செய்திகளோ அதிமுக ஆட்சியில் திமுக தலைவர்களைப் பற்றிய செய்திகளோ இடம் பெறுவதில்லை. கட்சித்தலைமையைக் குளிரச் செய்ய வேண்டும் என்னும் கொத்தடிமைப் போக்கு நிலவுவதாலும் இப் போக்கு நிலைக்கவே கட்சித் தலைமைகள் செயல்படுவதாலும் இத்தகைய வரலாற்று மறைப்புகளும் திரிபுகளும் இடம்பெறத்தான் செய்யும். நடுநிலை,சகிப்புத்தன்மை, கண்ணோட்டம், சால்பு முதலிய பண்புகள் போற்றப்பட்டாலே இந்நிலை மாறும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/31/2009 2:49:00 AM