Thursday, April 28, 2011

புலிகளின் தளபதி இரமேசு சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை?

புலிகளின் தளபதி இரமேசு சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை?

இது போன்ற  கொடூரக் கொலைகளுக்குப் பொறுப்பு சிங்கள அரசு மட்டுமன்று; இந்திய அரசும் தமிழக ஆட்சியாளர்களும் அனைத்துக் கட்சிகளும்தான். தங்கள் பெருமையைக் காட்ட பல நேர மணிநேர ஊர்வலத்தையும் கூட்டத்தையும் கூட்டும்  இவர்களால் இனப்படுகொலைநடக்கும் முன்னரே தமிழக மக்களை ஒருங்கிணைத்துப் போராடி இவற்றைத் தடுத்திருக்க முடியுமே! இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்ட மன்ற உறுப்பினர்க்ளும் அவர்களது ௩ தலைமுறை குடும்பத்தினரும் தேர்தலில் போட்டியிடவும் அரசின் பதவிகளை  வகிக்கவும் தடை விதிக்க வேண்டும். உடந்தையாயிருந்த அதிகாரிகளின் சொ்த்துகளைப் பறிமுதல் செய்து தண்டிப்பதுடன் அவர்களது  3 தலைமுறையினர் ஆட்சிப் பொறுப்பில்  வருவதற்கும் தடை விதிக்க வேண்டும். சிங்களத் தலைவர்களையும் படைத்தலைவர்களையும் கூட்டுக் கொலையாளிகளாக இருந்த இந்தியத்தலைவர்களையும்
அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும்.  கடவுளே நடைப்பிணங்களாக உள்ள எங்களையும் மன்னியுங்கள.! 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!