Sunday, May 31, 2009

பிரபாகரனின் பெற்றோர் உறவினர்களுடன் சேரத் தடை'

First Published : 31 May 2009 11:45:00 PM IST

Last Updated :

கொழும்பு, மே 30: பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (76), தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் வவுனியாவில் அரசு நடத்தும் அகதிகள் முகாமில் தனியாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை இதர உறவினர்களுடன் சேர அனுமதிப்பதில்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதைத் தெரிவித்த ராணுவத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் உதய நாணயக்கார, அவர்களுடைய பாதுகாப்பு கருதியே இப்படி தனியாக பிரித்து வைக்கப்படுகின்றனர் என்று கொழும்பில் சனிக்கிழமை தெரிவித்தார். ஆனால் அதை அவர் மேற்கொண்டு விவரிக்கவில்லை.

அகதிகள் முகாமில் உள்ள முதியவர்கள் முதுமையாலும் பல்வேறு வியாதிகளாலும் அவதிப்படுகின்றனர்.

அவர்களுக்கு உதவிகள் செய்யும் அளவுக்கு முகாம்களில் மருத்துவ வசதிகள் இல்லை. எனவே அவர்களை அவரவர் மகன், மகள், இதர உறவினர்களுடன் சேர்ந்து தங்க அனுமதிப்பது என்று அரசு முடிவு செய்திருக்கிறது.

ஆனால் பிரபாகரனின் பெற்றோர் மட்டும் பிற உறவினர்களுடன் சேர முடியாமல் தனித்து வைத்தே பராமரிக்கப்படுவர் என்று தெரிகிறது.

முகாமில் பிரபாகரனின் தந்தை ஒரு பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், தாயார் சாவதானமாக இருக்கிறார் என்று காட்டும் புகைப்படங்கள் கொழும்பு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.

பிரபாகரனின் பெற்றோருடன், போரில் உயிரிழந்த பிற விடுதலைப் புலிகளின் குடும்பத்தவரும் தங்கியிருக்கின்றனர்.

பிரபாகரனின் இதர உறவினர்கள், உயிரிழந்த பிற விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களின் உறவினர்களுடன் சேர்த்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்குள் இடம் பெயர்ந்த பிற தமிழர்களின் முகாம்களைவிட இந்த முகாம்கள் நன்கு பராமரிக்கப்படுகின்றன.

இங்கு உணவு, சுகாதாரம், மருத்துவ வசதி போன்றவை நன்றாக இருக்கின்றன என்று இலங்கைப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

தமிழர்கள் வசை: விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேராத சாதாரணத் தமிழர்கள் தங்கியிருக்கும் முகாம்கள் அடிப்படை வசதிகள் குறைவாகவும் போதிய அளவுக்கு உணவு தராத நிலையிலும் மோசமாக பராமரிக்கப்படுகின்றன.

அந்த முகாமில் இருப்பவர்கள் தங்களுடைய அவல நிலைக்கு பிரபாகரன்தான் காரணம் என்று வசைபாடுகின்றனர்.

பிரபாகரன் இரட்டை வேடம் போட்டதாகவும், போர் உச்ச கட்டத்தை எட்டுவதற்கு முன்னதாகவே தன்னுடைய உறவினர்களையும் பெற்றோரையும் இலங்கை அரசு நடத்திய முகாம்களுக்கு அனுப்பிவைத்ததாகவும் தங்களுடைய பெற்றோர்களை மட்டும் கடைசி வரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதாகவும் அவர்கள் குறை கூறுகின்றனர்.

இலங்கையில் இனப்படுகொலைக்குப் பிறகு ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டுக்குச் சென்றபோது பிரபாகரனின் பெற்றோர்களும் திருச்சிக்கு சென்று அங்கு நீண்ட காலம் வசித்தனர். பிறகு நார்வே தலையீட்டின் பேரில் சமாதானப் பேச்சு தொடங்கியபோது 2003-ல் மீண்டும் இலங்கைக்குத் திரும்பினர். அதுமுதல் இலங்கையிலேயே தங்கி வசிக்கின்றனர்.

திருச்சியிலிருந்து பிரபாகரனின் பெற்றோர் இலங்கையில் உள்ள வவுனியாவுக்குத் திரும்பியபோது கனடா நாட்டில் வசித்த அவர்களுடைய மகள் வினோதினியும் அவருடைய கணவர் ராஜேந்திரனும் உடன் வந்தனர்.

இத்தகவல்களை "தி ஐலண்ட்' பத்திரிகைத் தெரிவிக்கிறது.
கருத்துக்கள்

2/2 (தொடர்ச்சி) மேலும் மேதகு பிரபாகரனின் நண்பர் எனக் கூறிய கலைஞர் நடிக்கவில்லை என்றால் அவர்களை மதிப்படன் நடத்துவது மட்டும் அல்ல தமிழ்நாட்டின் விருந்தினர்களாக ஏற்பதாக அறிவித்துச் செயல்படுத்த வேண்டும. ஆனால், குடும்பத்தினருக்கான பதவிப் பேரங்களில் ஈடுபட்டு வரும் அவரால் இவ்வாறு செய்ய இயலாது. 'கையறுநிலை'ப் பாடல் வேண்டும் என்றால பாடலாம். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2009 4:16:00 PM

1/2 அறிவுமிகு அப்பன் அவர்களே! நல்ல கருத்தைச் சொன்னாலும் நடைமுறைப் போக்கை மறந்து விட்டீர்களே! ஈழத்தமிழர்கள்.இந்திய மக்கள் மீது பற்றும் மதிப்பும் கொண்டு இந்தியாவுடனான நட்பைத்தான் விரும்புகிறார்கள். இங்குள்ள தமிழ் மக்களும் அதைத்தான் விரும்புகின்றார்கள். ஆனால், தமிழ்ப்பகைவர்களின் வழிகாட்டுதலால் இந்தியாதானே அவர்களை ஓட ஓட விரட்டி அழிக்க வேண்டும் என்று துடிக்கின்றது. இராசீவ் காந்தி இருக்கும் பொழுதே அவருக்குத் தவறான வழிகாட்டி விடுதலைப்புலிகளையும் தமிழ் ஈழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் கொல்ல முயன்றது. எண்ணிலடங்கா கற்பழிப்புகளையும் பிற கொடுமைகளையும் அவர்களுக்கு இழைத்தது. அதற்குப் பின்னரும் இந்திய-ஈழ நட்பைத்தானே அப்பாவித் தமிழர்கள் விரும்பினார்கள். எனவே இந்திய மக்களைத் திரட்டி காங். அரசின் ஈழத் தமிழருக்கு எதிரான பேரழிவுப் போக்கை நிறுத்த ஆவன செய்ய முயல வேண்டும். (தொடர்ச்சி காண்க) வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2009 4:15:00 PM

United Nations, India, China, Pakistan have approved to kill all minorities around the world. Srilanka is an example. These countries have approved Srilanka for the mass murder minoritie civilians. United Nations not capable to save minorities indeed. Shame shame shame on you Mr. Baki Moon.

By S.M.S.Ismail Khan, Kerala
5/31/2009 4:09:00 PM

DEAR ALL MALAYALI MEANS KOLAIYALAI - THEY PROVE IT - SIVA SANKARA MENON & NARAYANAN WAIT AND SEE SRILANKA GIVE NICE PUNCH TO INDIA WITH CHINA HELP

By T.PRABAKARAN
5/31/2009 3:59:00 PM

பிரபாகரனை பெற்ற இவர்கள் விட்ட தவரால் இவன் பயங்கரவாதியனான் இவர்கள் நிச்சயம் தன்டனை அனுபவிக்க வேண்டும்.

By vanakaman
5/31/2009 3:53:00 PM

அட அறிவுகெட்டவனே. பிரபாகரன்தான் உனக்கு எதிரி. ஒழித்துவிட்டாய். அவரது பெற்றோர்களை ஏன் இன்னும் சிதரவதை செய்கிறாய். உனக்கு கேடுகாலம் நெருங்கி விட்டது. நீ உண்மையான பௌத்தனா.என்னமோ தெரியவில்லை. நீ நெருப்பிடம் விளையாடுகிறாய்.

By NADODI
5/31/2009 3:32:00 PM

Why Kooli padai Vanakamudi is NOT here yet

By mllu
5/31/2009 3:09:00 PM

ஈழ மக்கள் கொல்லப்படுவதை சொன்னால் சிங்களர்கள் 'ஆங்கிலேயர்கள் 1800 களில் சிங்களர்களை இப்படி லட்ச கணக்கில் கொன்று குவித்தார்கள் ' என்று சொல்கிரார்கள். இதனால் சிங்களர்களுகு இன அழிப்பு தப்பு இல்லை என நினைகிரார்கள். அதனால் ஈழ தமிழர்கள் ஒருபோது சிங்களர்களுடன் சேர்ந்து வாழ முடியாது. ஆனால் அவர்கள் ஈழத்தின் அண்டை பிரதேசம். இதை உனர்ந்து ஈழமக்கள் அரசியல் தீர்வு காண வேண்டும். ஈழம் என்பது தமிழர்களின் கலாச்சாரத்தின் ஒரு அங்கம். அதை எப்படி மாற்ற முடியும். சிங்களன் முதலில் இப்படி சொல்வான் பின் தமிழே பேசக்கூடாது என்று சொல்வான். ஈழத்தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியது ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்து உலகத்திர்க்கு அறிமுகம் செய்வது.மேற்க்கு உலகம் இப்போது ஈழ கொடியை அங்கீகாரத்து உள்ளது. இது தனி ஈழம் உருவாக இது முதல் படி. ஈழ மக்கள் சும்மா இப்படி ஒப்பாரி வைக்காமல், வன்முறையில் இரங்காமல், இந்தியாவுடன் நட்புரவு போற்றி ஈழம் பெற பாடுபடவும். சில புலி அறிஜீவிகள் இந்த விடயத்தில் மிகத்தரக் குறைவாக எழுதுகிரார்கள். சொல்லை, எண்ணத்தை கட்டுபடுத்தாதவர்கள் எப்படி ஈழம் அடைய முடியும். ஈழ மக்கள் விவேகமாக நடக்கவும்.

By Appan
5/31/2009 2:53:00 PM

NO MORE FREEDOM FOT TAMIL NATION. YOU TAMILS FOLLOW KERALA PEOPLE INTELLEGENTLY OTHERWISE YOU ARE THE LOSERS ALWAYS LIKE SRILANKAN TAMILS

By S.Pandian Narayanan
5/31/2009 2:36:00 PM

Prfect statement from mr. Myilvaganam from Jaffna , Srilanka. Thank yu for ehe practical comments; " Indians please stop all nonsence, You Indian hurt Tamils around the world. Now, we don't want Tamileealam, if you need an independent Tamilnadu for whole Tamils around the world, you can have an independent county for Tamil nation with in India only because, there are 900 millions Tamils live in India only. By S. Myilvaganam, jaffana, Silanka 5/31/2009 2:25:00 PM"

By L.Subramaniyam
5/31/2009 2:31:00 PM

No one deny their parents. Eventhough a leader of big unit - they must care of their parants. Poor parents of Mr.Prabhakar - at their lost stage to survive their life to struggles.

By S.Ravi
5/31/2009 2:28:00 PM

Indians pease stop all nonsence, You Indian hurt Tamils around the world. Now, we don't want Tamileealam, if yur need an independent Tamilnadu for whole Tamils around the world, you can have an independent county for Tamil nation with in India only becasue, there are 900 millions Tamils live in India only.

By S. Myilvaganam, jaffana, Silanka
5/31/2009 2:25:00 PM

பிரபாகரன் இறந்துவிட்டதாக சிங்களவன் கொக்கரிக்கிறான் மாவீரர்கள் எப்போதும் இறபதில்லை எண்பதுதான் உண்மை.இன்று அர‌சிய‌ல் தீர்வு காணவேண்டும் எ‌ன்று பல நாடுகளும் கூறுகின்றன.இலங்கையில் தமிழர்களின் சரிநிகர் உரிமைகாக ஜனநாயக,அறவழிலேயும்,அரசியல் வழிலேயும் போராடி பார்தாகிவிட்டது.பிரபாகரனும் புலிகலும் ஆயுதம் ஏந்தவில்லை என்றால் இன்று ஈழதமிழரகளை பற்றி பேசுவதர்கு கொஞ்சநஞ்ச தமிழர்கள்கூட இருந்திருக்கமாட்டார்கள்."தமிழர்களின் தாக்கம் தமிழில தாயகம்"

By saravanan
5/31/2009 2:15:00 PM

புலிகள் பெயரைச் சொல்லி 20,000 மக்களைக் கொன்று, பலரை உனமாக்கி , பலரை கற்பழித்து , குழந்தைகளை வதைத்து தமிழர் பிணங்களின் மேல் வெற்றியைக் கொண்டாடும் சிங்களவர்களின் ஆதரவாளர்கள் , புலிகள் தற்போது கொல்லப்பட்ட நிலையிலும் தமிழரைப் பாதுகாக்க முன்வராமல் இருப்பதை பார்க்கும் போது நல்லவனான ஆண்டவன் என்ன செய்யப்போகின்றான் ... ஈழத் தமிழருக்கு தெய்வம் மட்டுமே துணை ..

By Ananthan
5/31/2009 1:53:00 PM

en inam angu azhivathu kandu en manam vethanai adaigirathu. LTTE pavikala makkal ellorum azhintha pinbu etharkaha thamil ealam pinju kulzhanthaigalin kadharal kettu en manam vediththuvidum pol ullathu. LLTE un thalaivan uyirodu irunthalum sari, illavittalum sari appavi makkalai baligadavakkatheergal. theivam ninru kollum (illai) theivam indre kollum.

By anees
5/31/2009 1:14:00 PM

தமிழ் நெஞ்சங்களே வெறும் தமிழ்ப்பற்றும் ஆவேசமும் உள்ள போராட்டங்களால் தமிழ்மாண உரிமை கிடைக்கவே கிடைக்காது. எந்த சூழ்நிலையிலும் நமக்குள் ஒற்றுமையை நிலையாக வைத்திருக்கக் கூடிய தமிழுரிமைப் பண்பாடு வேண்டும். பணம் சொத்து பதவி காமம் பாசம் போன்ற சபல உணர்ச்சிகளும் சாதி ஏற்றத்தாழ்வுகளும் மதம் சாமி கட்சி வேற்றுமை உணர்ச்சிகளும் ஒரு நொடிப்பொழுதில் சட்டென்று ஏற்றத்தாழ்வையும் பிரிவினையையும் தூண்டிவிட்டு நமக்குள் பகையையும் வெறுப்பையும் குழப்பத்தையும் சண்டையையும் துரோகத்தையும் உண்டாக்கிவிடும். தாங்கள் மரணத்தைத் தழுவுவதெனத் தீர்மானிக்கும் உரிமை புலிகளுக்கு உண்டு. ஆனால் மக்களை மரணத்துக்குள் தள்ளி விடும் உரிமை புலிகளுக்கு இல்லை

By Farook Abdullah
5/31/2009 10:56:00 AM

SEE THE NAMES BELOW - WAR CRIMINALS RESPONSIBLE FOR THE KILLINGS OF OVER 20,000 TAMILS IN VANNI President Mahinda Rajapakshe, Defence Secretary Gothabaya RajapaksheGeneral, Army commander G S C FONSEKA, General Deepak Kapoor, (Chief of Army Staff. India), Air Chief Marshal Rao Qamar Suleman (Pakistan) , Admiral Wasantha Karannagoda, Air Chief Marshal WDRMJ Goonetileke, Inspector General of Police Mr. Jayantha Wickramarathna, Major General G. A. Chandrasiri, Major General M. C. Mendaka P Samarasinghe, Major General N. A. Jagath C. Dias, Major General Nandana Udawatta, Major General G. D. H. Kamal Gunarathna, Brigadier Prasanna P. De Silva, Brigadier Sathyapriya D. T. Liyanage, Brigadier L. H. Shavindra C. Silva, Brigadier C. P. Gallage, Brigadier P. M. Rohana Bandara, Colonel Nihantha D. Wanniarachchi, and Colonel G. V. Ravipriya

By D SINGH
5/31/2009 4:57:00 AM

தாங்கள் மரணத்தைத் தழுவுவதெனத் தீர்மானிக்கும் உரிமை புலிகளுக்கு உண்டு. ஆனால் மக்களை மரணத்துக்குள் தள்ளி விடும் உரிமை புலிகளுக்கு இல்லை

By lankan
5/31/2009 4:13:00 AM

No comments: